Thursday, March 4, 2010

ஒற்றை விரல்

'ஒரு குழந்தையாகவே
உன்னை விட்டு வைக்கலாம்
காலம் ' என்றேன்..
'போப்பா.. நீங்க
இன்னும் வளரவே இல்லை '
என்றாள் அவள் !

இரவின் நிசப்தம்
கிழித்த அழுகை
ஒரு குழந்தையின்
பசி என்று
திரும்பிப் படுத்தபோது
அவள் எழுந்து போனாள்
நீர் குடிக்க
என் அறியாமையைக்
கேலி செய்து .

இது வரை
பூக்கத் தெரியாத எனக்கும்
நீர் ஊற்றிப் போகிறது
அந்தப் பெயர் தெரியாத மேகம்..
என் பசுமை அப்படியே
உதிர்ந்த இலைகளுக்குப் பின்னும்.

சொட்டிக் கொண்டிருக்கிறது
மனசு
உன் ஒற்றை விரலுக்காக !

No comments:

Post a Comment