இந்த கன்றாவிகளைப் பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் செய்திகளைப் பற்றி படிக்கும் போது எழுதினால் என்ன என்று நினைக்கத் தோன்றுகிறது.
நித்தியானந்தா மீதான திடீர் புகார் - முழுமையாக விசாரிக்க வேண்டும் - ராம கோபாலன்
இது போன்று முறைகேடுகள், விதவைகள் மீது பாலியல் தொந்தரவு (அணுராதா ரமணன் உட்பட), நம்பிக்கை மோசடி கூடுதலாக கொலை ஆகியவற்றுடன், ஆபாச வீடியோ வெளியீடுகள் மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் பெரியவாவை உள்ளே வைத்து விசாரணை நடத்திய போது அரசுக்கு எதிராக போராடியவர்கள் தான் இராம கோபாலன் தலைமையிலான இந்து அமைப்புகள்.
நித்யானந்த மேட்டரில் விசாரனை நடை பெற வேண்டும் என்று உடனடியாக கேட்பதில் இருந்து இந்த அமைப்புகளின் உள்நோக்கம் பற்றி நினைக்க வேண்டி இருக்கிறது.
பெரியவா சின்னவாக்களின் மீது விசாரணையே கூடாது, அவர் தவறு செய்யக் கூடியவர் அல்ல என்று வரிந்து கட்டியவை நித்யானந்ததின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதின் பற்றி நினைத்தால் வெறும் பார்பனர் / பார்பனர் அல்லாதவர் என்கிற அரசியலே காரணம். மற்றபடி இந்து மதத்தை இவர்கள் துய்மை படுத்த நடவெடிக்கை எடுக்கச் சொல்கிறார்கள் என்று நினைக்க முடியவில்லை.
பெரியாவா மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்றாலும் குறைந்த பட்சமாக விசாரணை நடை பெற்றால் உண்மை தெரியும், எனவே இது பற்றி நாங்கள் மவுனம் சாதிக்கிறோம் என்றாவது கூறி இருக்கலாம், ஆனால் சு.சாமி மற்றும் ஏவி எம் நிறுவன உரிமையாளர்களுடம் சென்று விசாரணைக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்து காஞ்சியைக் காப்பாற்ற வேண்டியவர்கள் தான் இந்த இந்து அமைப்புகள்.
ஒருவரை நீதிமன்றம் சாட்சிகளின் வழியாக குற்றவாளி என்றால் மட்டுமே ஒருவர் குற்றவாளி என்பது நடைமுறை ஆனால் ஒருவர் மீது குற்ற அடிப்படைகளை வைத்து குற்றம் சுமத்தி விசாரணைக் கோருவது தவறே இல்லை. அப்படி பட்ட குற்றச் சாட்டுகள் பெரியவாளுக்கு எதிராக பதிய வைத்தற்குக் கூட எதிர்ப்பு காட்டிய இந்து அமைப்புகள் நித்யானந்ததிற்கு மட்டும் உடனடியாக விசாரணைக் கோருவது ஏன் ?
காரணம் மிக எளிது, நித்யானந்தம் ஒரு சூத்திரன், மேலும் (வீடியோவில் பார்த்ததில்) மிகவும் கருப்பாகவே இருக்கிறான், அவனிடம் பார்பன லட்சணம் என்று கூறிக் கொள்ளும் ஒரு அடையாளமும் இல்லை. போட்டிக்கு கல்லா கட்டியவன் என்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் தெரியவில்லை.
******
இராம கோபாலன் மற்று இந்து மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லுபவர்களும், சில இந்து அமைப்புகளும் பார்பனிய / வருணாசிரம நலம் காப்பவர்கள் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகவே உள்ளது.
நித்யாநந்தம் யோக்கிய சிகாமணி பார்பனரல்லாதவர்கள் அவனைப் பற்றிப் பேசாதீர்கள் என்று சொல்வதற்காக நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் ஆன்மிகம் என்ற பெயரில் அரசியல் நடத்துபவர்கள், பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவு பெற வேண்டும் என்று நினைக்கும் இந்து அமைப்புகள் எப்படி ஒரு பக்க சார்பாக நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும். இது போன்ற அமைப்புகளால் இந்து மதம் மெய்யாலுமே காக்கப்படுமா ? ஆனால் இதே அமைப்புகள் மார்ச் 2 முன்பு, நித்யானந்ததின் செல்வாக்கு, வளர்ச்சி, உறுப்பினர் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து நித்யானந்தம் இந்து மதத்தின் புதிய சூரியன், நவீன விவேகாநந்தர் என்று புகழ்ந்தவைகள் தாம். ஒரு பார்பன சாமியார் சிக்கினால் அவர் தப்பே செய்யாதவர் என்றும், அதுவே ஒரு சூத்திர சாமியார் சிக்கினால் நடவெடிக்கை கோருவதென்றால் அதில் உள்நோக்கம் இன்றி வேறென்ன, இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், இந்து அமைப்பு என்ற போர்வைகள் யாரைக் காப்பதற்கு என்று, இவர்கள் ஒட்டு மொத்த இந்துக்களின் நலனையும் இந்து மதத்தின் நலனையோ, இந்து தெய்வங்களின் நலனையோ காக்கிறார்கள் என்று நினைப்பவர்கள் தான் யோசிக்க வேண்டும். இது போன்ற பக்க சார்பு அமைப்புகளை நம்பும் நம்மால் இந்துகளுக்குள் ஒற்றுமையாவது வளர்க்க முடியுமா ?
இன்னும் ஒரு இடத்தில் சந்தடி சாக்கில் ஒரு இஸ்லாமியர் 'எங்க மதத்தில் துறவரம் கிடையாது....இது போன்று நடப்பதில்லை' என்கிறார். எல்லோரும் இஸ்லாமியராக மாறுங்கள் உண்மையான இறைவனை அடையுங்கள் என்கிறாரா தெரியவில்லை. அப்பாவிகளை தீவிரவாதிகளாக்கி, தற்கொலை படைகளாக மாற்றி இறக்குவதைவிட சாமியார்களின் செக்ஸ் லீலைகள் எனக்கு பெரியதாகவே தெரியவில்லை. எல்லா மதத்திலும் எல்லா கன்றாவிகளும் இருக்கு. அதனால் கைகொட்டி சிரிப்பவர்களும், உள்ளுற புழுக்கம் அடைவர்களும் இது போன்ற நிகழ்வுகளை சாட்சியாக பார்த்துக் கொண்டு முடிந்தால் எதிர்ப்புகளை அங்கங்கே தெரிவிக்கலாம்.
படம் : நன்றி வினவு
Thursday, March 4, 2010
நித்யானந்தா VS பெரியவா !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment